ஒரு தாயின் கதை ...
முன்னுரை:
அம்மா - இந்த ஒரு சொல்லுக்கு இணை உலகில் வேறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகத்தில் தாயை பற்றி நிறைய பேர் பேசி/எழுதி விட்டார்கள். நான் எதை புதிதாக எழுதிவிட போகிறேன்?
இருப்பினும், தாயை பற்றி எழுத நினைத்தால் எனக்கு இவை கண்டிப்பாக ஞாபகத்திற்கு வரும்.
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே ..." என்ற பாடலும், ஒரு ராஜா காலத்து கதையில், தன் மகன் தீயவர் சொல் கேட்டு தன் தலையையே கொய்துவிட்டு செல்லும்போது, கால் தடுமாறி விழப் போனவனைப் பார்த்து, தம்பி பார்த்து போப்பா... அடி ஏதும் பட்டுடுச்சா என அந்த தாய் கேட்டாளாம்.
அப்படி பட்ட தாயை பற்றி நான் எழுத இனி எதுவும் இல்லை. ஆனால் அதே தாய் என்னிடம் தன் சுய சரிதையை, அனுபவங்களை, அறிவுரைகளை தன் 70 களில் எழுத ஆரம்பித்து என்னிடம் நீட்டி அதை ஒரு புத்தகமாக போட வேண்டும் என கேட்டு கொண்ட போது, புத்தகமாக போடுவதை விட அவர்களுக்கென்று ஒரு தனி பக்கத்தை உருவாக்கி அதை வலையில் பதிவு செய்வதையே நான் விரும்பினேன்.
இனி என் தாயின் எழுத்துக்கள் ... அடுத்த பதிவில் ...
Wednesday, October 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநல்ல விஷயம்..
ReplyDeleteநன்றி..
started up nicely.. but why don't u push some time for this to grow..
ReplyDeleteWonderful. Eagerly awaiting.
ReplyDeleteஎன்னவாயிற்று தாயின் கதை ?
ReplyDelete